"பலமுறை அழுதிருக்கிறேன்; சினிமா வேண்டாம் என நினைத்திருக்கிறேன்"- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா

பவன் கல்யாண் நடிப்பில் உருவான ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் உகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஹரிஷ் சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடித்திருக்கிறார். ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்திலும், பார்த்திபன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.

 'உஸ்தாத் பகத் சிங்'
‘உஸ்தாத் பகத் சிங்’

தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீலீலாவும், ராஷி கண்ணாவும் சோசியல் மீடியா ட்ரோல்கள் குறித்து பேசியிருக்கின்றனர்.

முதலில் பேசிய ஸ்ரீலீலா, “நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமென்ட்களும், ட்ரோல்களும் வரும்.

ஆரம்பத்தில் அது மிகவும் மனதை பாதித்திருக்கிறது. பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.

ஒருகட்டத்தில் நமக்கு இந்த சினிமா வேண்டாம், மீண்டும் கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தொடரலாமா?” என்று கூட நினைத்திருக்கிறேன்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்து என்னுடைய வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகிறேன். இப்போது பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்.

தேவையானதை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன், தேவையற்றதை புறக்கணிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

ராஷி கண்ணா
ராஷி கண்ணா

தொடர்ந்து பேசிய ராஷி கண்ணா, ” இன்றையக் காலகட்டத்தில் ட்ரோலிங் என்பது மிகவும் அதிகமாகியிருக்கிறது.

உண்மை என்னவென்று தெரியாமல் மக்கள் மிக எளிதாக ஒருவரை ஜட்ஜ் செய்துவிடுகிறார்கள். குறிப்பாக வியூஸிற்காகவும் தவறாக ட்ரோல்கள் செய்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.