திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரவிழாவுக்காக கோயிலில் கொடி ஏற்றப்பட்டது. ஏப்ரல் 1ந்தேதி பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால், பங்குனி உத்திர திருவிழா மற்றும் ஆராட்டு விழாவை முன்னிட்டு அய்யப்பன் கோவிலில் (இன்று) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு காலங்களிலும், தமிழ் மாதங்களிலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். […]