சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அப்போதைய அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால், அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் […]