சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (மார்ச் 26) கடைசி நாள். இதன்பிறகு விண்ணப்பிப்பவர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாது. தகுதியுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து தங்கள் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாகச் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் […]