சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக்கோரி திமுக எம்.பி. கிரிராஜன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது ரெயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ரெயிலில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் […]