சென்னை: நோய்களை உருவாக்கும் நச்சு ரசாயனங்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் பயன்படுத்துவது குறித்து, மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெருகி வரும் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக நாம் உண்ணும் உணவு மற்றும் உடைகள் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் பல்வேறு வேதி பொருட்களும் காரணமாக அமைகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகப்படுத்தும் டயாப்பார்கள், நாப்கின்களாலும் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான […]