Iran: இஸ்ரேலின் செயல்; ஆதரித்த ட்ரம்ப்; மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதா ஈரான்?

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை, ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இனி ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், ‘இஸ்ரேல்’.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் போர் நிறுத்த அறிவிப்பிற்குப் பின், சில பதிவுகளைப் பதிவிட்டது. அதில் ஈரான் மீதான போர் நிறுத்தம் தொடரும். ஆனால், அந்தப் போர் நிறுத்தத்தில் லெபனான் விதிவிலக்கு என்று கூறப்பட்டிருந்தது.

சொன்னதைப் போல, இஸ்ரேல் நேற்று லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.

லெபனான் தாக்குதல்
லெபனான் தாக்குதல்

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஆதரித்திருக்கிறார். அவர் பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்தம் லெபனானிற்குப் பொருந்தாது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், ஈரான் குறிப்பிட்ட போர் நிறுத்தத்தில் லெபனானும் அடங்கியிருந்தது.

ஆக, இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை மீறியதாக, ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இது அறிக்கையாக எங்கும் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், ஈரானிய பத்திரிகைகள் ஹார்முஸ் ஜலசந்தி மூடலை உறுதிப்படுத்தி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.