'ஊழல்' செல்வப்பெருந்தகை, 'வீண் முறையீடு' கார்கே – ஹசீனா சையத் காங்கிரஸில் இருந்து விலகல்

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் தலைவர் ஹசீனா சையத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹசீனா சையத் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

Hazeena Syed - ராஜினாமா கடிதம்
Hazeena Syed – ராஜினாமா கடிதம்
Hazeena Syed - ராஜினாமா கடிதம்
Hazeena Syed – ராஜினாமா கடிதம்

“கட்சியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். நான் இந்தக் கட்சியை இதயப்பூர்வமாக நேசிக்கிறேன். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அந்த அன்பு ஒருதலைபட்சமாகவே இருந்துள்ளது.

மத்திய தேர்தல் குழுவின் (CEC) முடிவு மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உங்கள் பிடிவாதமான வலியுறுத்தலையும் மீறி, எனக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது எனக்கு அவமானம். எனக்கு தனிப்பட்ட முறையில் காயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், கட்சிக்கும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது.

என்னைப் போன்ற தகுதியுள்ள ஒரு பெண்ணுக்கு…

இந்திரா காந்தி ஜி, ராஜீவ் காந்தி ஜி, சோனியா காந்தி ஜி மற்றும் உங்கள் கனவான 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடு என்பது வெறும் சொல்லளவிலேயே நின்றுவிட்டது.

என்னைப் போன்ற தகுதியுள்ள ஒரு பெண்ணுக்கும், தமிழ்நாடு மகிளா காங்கிரஸைச் சேர்ந்த வேறு சிலருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எங்களுக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை.

மகிளா காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், தலைமை எனக்கு அநீதி இழைத்துள்ளதாக நான் உணர்கிறேன். இது குறித்து காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே ஜி அவர்களிடம் நான் தீவிரமாக முறையிட்டேன்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

ஊழல் மிகுந்த செல்வப்பெருந்தகை

ஆனால் வழக்கம் போல் அது வீணாகிவிட்டது. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. செல்வப்பெருந்தகையின் ஊழல் நிறைந்த முறைமைக்கும், அதனுடன் தொடர்புடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) செயலாளர் மற்றும் தற்போதைய ஜார்கண்ட் பொறுப்பாளர் திரு. ஸ்ரீவெல்ல பிரசாத், மயிலாடுதுறை எம்.பி திருமதி. சுதா, திரு. சாம் பிட்ரோடாவுடன் தொடர்புடைய ஓவர்சீஸ் காங்கிரஸைச் சேர்ந்த திரு. புஷ்பராஜ், தற்போதைய தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் மற்றும் நிவேதித் ஆல்வா ஆகியோரின் தீய நோக்கங்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும்

மாணவர் காங்கிரஸ் முதல் 2008-ஆம் ஆண்டு யூத் காங்கிரஸின் ‘டேலண்ட் ஹண்ட்’ (Talent Hunt) திட்டத்தின் மூலம் உங்களால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கப்பட்டது வரை, கடந்த 3 தசாப்தங்களாக நான் இக்கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறேன்.

ஆனால் இப்போது எனது கண்ணியமும் சுயமரியாதையும் சமரசம் செய்யப்பட்டதாக உணர்கிறேன். எனக்கே நீதி மறுக்கப்படும் போது, எனது கட்சி நிர்வாகிகளுக்கு 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு உரிமையை என்னால் எப்படிப் பெற்றுத் தர முடியும்?

எனவே, நான் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். இருப்பினும், எனது கட்சி மற்றும் காந்தி குடும்பத்தின் மீதான எனது அன்பு என்றும் தொடரும்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

எனது ஒரே கேள்வி இதுதான்: மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் போன்ற ஒரு மூத்த தலைவர், நமது மாநில காங்கிரஸ் தலைவரின் ஊழல் அமைப்பிற்கு இந்த அளவிற்கு ஆதரவாக இருப்பது எப்படி?

இதனால் உண்மையான தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்த முறைமை சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது, இது கட்சிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகும்”.

இவர் இந்தக் கடிதத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.