தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருக்கிறார்.

இவருக்குப் பதிலாக தற்போது இந்தப் பணியில் கே.மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிக்கை
அறிக்கை

இன்று மாலை 5 மணிக்குள் மணிவாசன் பதவி ஏற்க உள்ளார்.

தமிழ்நாடு தேர்தல் முடியும் வரையில் தீரஜ் குமார் எந்தவொரு தேர்தல் சம்பந்தமான பதவியிலும் பணியமர்த்தப்பட மாட்டார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், மணிவாசன் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.