'துருக்கியின் அழகான பெண் எனக்கு மனைவியாக வேண்டும்' – வரம்பு மீறிய உகாண்டா அதிபர் மகன்

துருக்கி மற்றும் உகாண்டா உறவில் தற்போது விரிசல் விழுந்திருக்கிறது.

இதையொட்டி துருக்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை உகாண்டாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் முஹூசி கைனெருகபா அடுக்கியுள்ளார்.

இவர் உகாண்டா பாதுகாப்புப் படைகளின் தலைவர் மட்டுமல்ல… உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவேனியின் மகனும் கூட.

துருக்கி தங்கள் மூலம் பலன்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கான எந்த அங்கீகாரத்தைத் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், இவர்களுக்கு துருக்கியிடம் இருந்து வரும் நிதியும் இன்னும் வரவில்லை என்று கூறுகிறார்.

முஹூசி கைனெருகபா பதிவுகள்
முஹூசி கைனெருகபா பதிவுகள்

அவை 30 நாள்களுக்குள் வந்து சேரவில்லை என்றால், உகாண்டாவில் உள்ள துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் உள்ள உறவு முறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர் துருக்கி தர வேண்டிய தொகை என்று 1 பில்லியன் டாலரைக் குறிப்பிடுகிறார். இத்துடன் துருக்கியின் மிக அழகான பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.