ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிக்கு விராட்கோலி கையெழுத்திட்ட பேட் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்

மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பின்னர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு  சென்று அதனை பார்வையிட்டார். 
அவருடன் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பெய்னும் சென்றிருந்தார். அப்போது விராட்கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை  ஜெய்சங்கர் மரிஸ் பெய்னுக்கு பரிசாக வழங்கினார்
பின்னர் இது குறித்து தமது ட்விட்டர் பதிவில் நியாயமான ஆட்டம் மற்றும் விளையாட்டின் விதிகளின் செய்தி என்று ஜெய்சங்கர்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.