புல்வாமா தாக்குதல் நினைவு நாள் : உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி| Dinamalar

புதுடில்லி : 2019 பிப்., 14ல், ஜம்மு – காஷ்மீரின் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, நம் ராணுவம், ‘சர்ஜிகல்’ ஸ்டிரைக்’ எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தி, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலின், மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, புல்வாமாவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல், டி.எஸ். சவுத்ரி தலைமையில், வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி,ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.