கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை குளத்தில் புதைந்துள்ளது: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதில் இருந்த மயில்சிலை குளத்தில் புதைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குளத்தை தோண்டாமல் சிலையை கண்டறிய அண்ணா பல்கலைக்கழக உதவியை கோரியுள்ளோம். அலகில் பூவுடன் உள்ள சிலை இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் ஏதுமில்லை. பாம்புடன் கூடிய மயில் சிலைக்கு பதிலாக பூவுடன் கூடிய மயில் சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குளத்தில் புதைந்துள்ள மயில் சிலையை கண்டுபிடிக்க 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.