"இந்த உறவையும்,அன்பையும் எந்த அரசியலாலும் பிரிக்க முடியாது!" இயக்குநர் அமீர் பெருமிதம்

ஜெயம்ரவி நடித்த ‘ஆதிபகவன்’ படத்திற்குப் பிறகு, தற்போது ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஆமீர். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு டைரக்‌ஷன் பக்கம் வந்திருக்கிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன், தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். சூரி, ஆர்யாவின் தம்பி சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆனால் விஷயம் இதுவல்ல. தற்போது, ஆன்மிக பயணமாய் மெக்கா சென்றுள்ளார் அமீர். ”தான் என்கிற கர்வம் குறைத்து நான் என்கிற பெருமை மறந்து ஒரு வழிப்போக்கனாய்..” என நெகிழ்ந்து தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர் மெக்கா சென்றதை அறிந்த அவரது நண்பர்கள் பலரும் அவரிடம், ‘தங்களுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்’ என கூறியிருக்கின்றனர்.

வெற்றிமாறன் – சூரி

இதுபற்றி தனது வாட்ஸ் அப் நிலைத்தகவலில் மெக்காவில் பிரார்த்தனை செய்யும் படத்தை வெளியிட்டு ”நான் ஆன்மீகப் பயணம் செல்கிறேன் என்று சொன்னவுடன், எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று என்னிடம் சொன்னவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்து நண்பர்களே! இந்த உறவையும், அன்பையும் சமய நல்லிணக்கத்தையும் எந்த அரசியலாலும் பிரிக்க முடியாது” என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.