திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 10 பேரை கைது செய்த போலீசார்.!

திருப்பூரில், முறைகேடாக உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் சாலை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து வீரபாண்டி போலீசார் விசாரித்த போது, அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் உரிய ஆவணங்களின்றி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் சின்னக்கரை பகுதியில் தங்கியிருந்ததும் சிலர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 10 பேரையும் கைது செய்த வீரபாண்டி போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.