பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமனம்

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நாதசு செய்தித்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, புதிய ஆளுநர் நியமனம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.