இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் -டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று ஆஜர்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராகிறார் டி.டி.வி. தினகரன்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் 2017-ம் ஆண்டு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் கடந்த 4-ம் தேதி வழக்குப்பதிவு செய்த டெல்லி அமலாக்கத்துறை இடைத்தரகர் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் டிடிவி தினகரன் தனக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் அதில் 25 கோடி ரூபாய் தனக்கு வழங்கியதாகவும் மீதமுள்ள 25 கோடி ரூபாய் கேரள மாநிலத்தில் தன் மனைவியிடம் வழங்கியதாக சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஏப்ரல் 6-ம் தேதி டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி அமலாக்கத்துறை ஏப் 8-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் கூறி இருந்தது. ஆனால் தனிப்பட்ட வேலை காரணமாக 8-ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி இருந்தார். ஆனால் அதனை அமலாக்கத்துறை ஏற்க மறுத்த நிலையில் அடிப்படையில் கடந்த 12-ம் தேதி காலை 10.50 மணிக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

image
அன்றைய தினம் டி.டி.வி. தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது லஞ்சம் கொடுக்கபட்டதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத போதிலும் சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. மேலும், 11 மணி நேர விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தான் ஒரு நிரபராதி. அதேவேளையில் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த பொய்யான வாக்குமூலத்தின் அடிப்படையில் தன்னை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததாகவும், இதற்குப் பின்புலமாக சில அரசியல் சதி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் ஆனால் அதனை யார் செய்கிறார்கள் என தனக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும் இவ்வழக்கில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரும் பட்சத்தில் தான் நிச்சயம் ஆஜராவேன் என செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் 21-ம் தேதி ஆஜராக கூறி இருந்த நிலையில் அமலாக்கத்துறையின் சம்மன்னில் 22-ம் தேதி ஆஜாராகும்படி கூறப்பட்டு இருந்தது. அதனால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராகி டிடிவி தினகரன் விளக்கம் அளிக்க உள்ளார்.

இதையும் படிக்க: சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக சொத்துகளை முடக்கியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.