இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என தகவல்

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் கோத்தபயவுடனான சந்திப்பிக்கு பின் பேசிய மகிந்த ராஜபக்சே, 20வது சட்டத் திருத்தத்தின் படி நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபருக்கு உரிமை உள்ளதாகவும், அப்படி அதிபர் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் பிரதமரை நீக்கி இடைக்கால அரசை அமைக்குமாறு அதிபரை சந்தித்து எதிர்கட்சிகள் தெரிவித்த நிலையில், வரும் நாட்களில் இலங்கை அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.