எலிசபெத் ராணியாரே கடைசியாக இருக்கட்டும்: பிரித்தானியா முழுவதும் காணப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு


பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் களைகட்டவிருக்கும் நிலையில், அரச குடும்பத்திற்கு எதிரான சுவரொட்டிகள் நாடு முழுவதும் காணப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சுவரொட்டிகளில், எலிசபெத் ராணியாரே பிரித்தானிய அரச குடும்பத்தின் கடைசி உறுப்பினராக இருக்கட்டும் என்ற விவாத வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்புடைய அமைப்பானது பொதுமக்களிடம் இருந்து சுமார் 45,000 பவுண்டுகள் திரட்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் 40 சுவரொட்டிகள் எழுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எலிசபெத் ராணியாரே கடைசியாக இருக்கட்டும்: பிரித்தானியா முழுவதும் காணப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

இந்த வார இறுதியில் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஆதரவாளர்கள் ராணியின் பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாட உள்ளனர்.
பெரும்பாலான மக்கள் இந்த கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியாக இல்லை என தெரிவித்திருந்த போதும்,

நாடு முழுவதும் 70,000 பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஜூபிலி மதிய விருந்துக்கு 10 மில்லியன் பிரித்தானியர்கள் பங்கேற்பார்கள் என நம்பப்படுகிறது.

இதனிடையே நாடு முழுவதும் எழுப்பப்பட்டுள்ள 40 சுவரொட்டிகளில் இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் சார்லஸ் ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலிசபெத் ராணியாரே கடைசியாக இருக்கட்டும்: பிரித்தானியா முழுவதும் காணப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.