ராஜாஜி நகர் : சினிமா எடுத்து நஷ்டம் ஏற்பட்டதால் நில மோசடி செய்த தயாரிப்பாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கன்னடத்தில் கோமல் நடித்த ‘லொட்டே’ சினிமாவை தயாரித்தவர் மஞ்சுநாத், 50. இந்த படம் சரியாக ஓடாததால் நஷ்டம் ஏற்பட்டது. எனவே இவர் ராஜாஜி நகரில் ‘ஈகிள் ட்ரீ பில்டர்ஸ் அன்ட் டெவலப்பர்ஸ் டாட்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஆரம்பித்தார்.அதோடு குறைந்த விலைக்கு நிலம் விற்பனை செய்யப்படும் என விளம்பரம் செய்திருந்தார்.
இதை பார்த்த புஷ்பகுமார், 35 என்பவர் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருக்கோ சொந்தமான நிலத்தை காண்பித்து விற்பனை செய்வதாக கூறினார்.அதனை நம்பிய புஷ்பகுமார், இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார். அதன்பிறகு நிலத்துக்கான ஆவணங்களை கேட்டபோது கொடுக்காமல் தயாரிப்பாளர் ஏமாற்றி வந்தார்.இது குறித்து ராஜாஜிநகர் போலீசில் புஷ்ப குமார் புகார் செய்தார். மஞ்சுநாத் மற்றும் அவருக்கு உதவிய சிவகுமார், 40 கோபாலா, 35 சந்திரசேகர், 38 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
ராஜாஜி நகர் : சினிமா எடுத்து நஷ்டம் ஏற்பட்டதால் நில மோசடி செய்த தயாரிப்பாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கன்னடத்தில் கோமல் நடித்த ‘லொட்டே’ சினிமாவை தயாரித்தவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.