சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை தீ வைத்து எரித்து கொன்ற பெற்றோர்கள்..!

ஜார்க்கண்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீயிட்டு கொளுத்தி கொலை செய்தனர்.

கும்லா பகுதியைச் சேர்ந்த சிறுமியும், அவரது தாயும் அருகே உள்ள கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப இருந்தனர்.

அப்போது, பேருந்து கிடைக்காததால், அவ்வழியே பைக்கில் சென்ற கும்லா பகுதியைச் சேர்ந்த இருவரிடம் சிறுமியை ஊரில் விடுமாறு அவரது தாய் கூறியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, பைக்கில் ஏறிய சிறுமியை இளைஞர்கள் வனப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் குறிப்பிட்டனர்.

இதனை பெற்றோரிடம் சிறுமி கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள், உறவினர்களுடன் சேர்ந்து இளைஞர்களை தாக்கி, அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும் போலீசார் கூறினர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.