கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

பெங்களூரு:

பெங்களூரு பேடராயனபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் விஜயநகர் அருகே அத்திகுப்பேயை சேர்ந்த அபிஷேக் (வயது 28), பாபுஜிநகரை சேர்ந்த அபி (26) என்று தெரிந்தது.

இவர்கள் 2 பேரும் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்து 7 கிலோ 550 கிராம் கஞ்சா, செல்போன்கள், ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர்மீதும் பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.