சென்னை: வரலாற்றில் முதல்முறையாக 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கோயில்களில் திருப்பணி செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள 2,000 கோயில்களில் பணிகளுக்கு ரூ.2 லட்சம் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
