லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் உள்ள பூங்காவில், மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பூங்கா ஒன்று உள்ளது. நேற்று முன்தினம், இப்பூங்கா அருகே கார் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, பூங்காவில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, மக்கள் அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் அதிகாரி கெல்லி முனிஸ் கூறியதாவது:பூங்காவில் உள்ள பேஸ்பால் விளையாட்டு திடலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மர்ம நபர்கள், அங்கிருந்தோரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், இருவர் உயிரிழந்தனர்; மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் உள்ள பூங்காவில், மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பூங்கா ஒன்று உள்ளது. நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்