பூஸ்டர் டோஸ்: கோவாக்சினுக்கு ஜப்பான் அனுமதி| Dinamalar

புதுடில்லி: பயணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவாக்சின் பூஸ்டர் டோஸாக பயன்படுத்த ஜப்பான் அனுமதி அளித்தது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனுக்கு கிடைத்த மற்றொரு உலகளாவிய அங்கீகாரம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.