வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 4 காமக்கொடூரன்கள் கைது

திருவனந்தபுரம்: வீட்டில் தனியாக இருந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் மாவட்டம் சிறையின்கீழ் அருகே உள்ள அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி. அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக ஒழுங்காக பள்ளிக்கு செல்லவில்லை.

இந்த மாணவியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த வகுப்பு ஆசிரியை விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அந்த மாணவியை அருகிலுள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத கட்டிடத்தில் வைத்தும், கடற்கரையில் வைத்தும் அந்தக் கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.

வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அஞ்சுதெங்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிறையின்கீழ் வெட்டூர் பகுதியைச் சேர்ந்த கபீர் (57), அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த சமீர் (33), சைனுல்லாப்தீன் (59) மற்றும் நவாப் (25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 2 பேர் சிறுமியின் வீட்டுக்கு அருகே வசித்து வருகின்றனர். விசாரணைக்குப் பின் போலீசார் 4 பேரையும் வர்க்கலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.