கணியாமூர் பள்ளியை சீரமைப்பது, திறப்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

+2 மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை திறக்கவும் அனுமதிப்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், தடயங்கள் சேகரிக்க வேண்டி இருப்பதால் பள்ளியை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பள்ளியின் தாளாளர் ரவியின் மகன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.