பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன்..!

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கபட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போதைய ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர்ந்து பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இம்ரான்கான், அந்த நாட்டின் நீதித்துறைக்கும், போலீசுக்கும் மிரட்டல் விடுக்கிற வகையில் பேசினார். இதனால் அவர் மீது மறுநாளில் பயங்கரவாத தடுப்பு சட்டம் பிரிவு 7-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார்.
இந்த வழக்கில் அவர் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் பெற ஏதுவாக 3 நாள் ஜாமீனை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு வழங்கியது. இந்த வழக்கில் இம்ரான்கான் ஜாமீன் கேட்டு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று அவர் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது கோர்ட் வளாகம் முன்பு இம்ரான் கானின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். வழக்கு விசாரணையின் போது, போலீஸ் தரப்பில், இம்ரான் கான் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக உள்ளது என்றும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வாதிட்டது.

இந்த மனுவை நீதிபதி ராஜா ஜாவத் அப்பாஸ் ஹசன் நேற்று விசாரித்தார். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விசாரணை முடிவில் அவருக்கு செப்டம்பர் 1-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி ராஜா ஜாவத் அப்பாஸ் ஹசன் உத்தரவிட்டார். இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.