முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு… இனி எல்லாமே தெலுங்கில்தான்!

‘பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் தங்களது பெயரை எழுதும்போது அவர்களின் இனிஷியலையும் தமிழில் எழுதும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.. அத்துடன் பள்ளியில் மாணவ்ர் சேர்க்கை விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை முடித்ததும் பெறப்படும் சான்றிதழ்கள் என அனைத்தும் மாணவர்களின் தமிழ் முன் எழுத்தில் இருக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்’ என தொடக்க கல்வி இயக்குநரகம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் அறிவிப்பாணை அனுப்பி இருந்தது.

தாய் மொழியான தமிழின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் விதத்தில் பள்ளிக் கல்வித் துறை இப்படியொரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை விஞ்சும் விதத்தில் ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், ‘ அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் அலுவலர்கள் இனி தெலுங்கில் மட்டுமே பேசவும், படிக்கவும், எழுதவும் செய்ய வேண்டும்.

அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி மோகத்தை தடுக்கும் விதத்திலும், தெலுங்கை முழுவதுமாக அரசு அலுவல் மொழியாக கொண்டு வரும் நோக்கத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

எனவே அரசு அலுவலகங்களில் இனி வேற்று மொழி கலப்பில்லாமல் தெலுங்கில் மட்டுமே அலுவல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகழும் இருக்க வேண்டும். இந்த உத்தரவை மதி்க்காமலோ, மீறும் விதத்திலோ செயல்படுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்’ என்று ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.