ஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை| Dinamalar

மும்பை :மஹாராஷ்டிராவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து, மர்ம நபர்கள் ௧௧ லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.மஹா.,வின் சதாரா மாவட்டத்தில் உள்ள நாக்தானே கிராமத்தில், ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’வின் ஏ.டி.எம்., மையம் உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு இதற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு இயந்திரங்களில் ஒன்றை வெடி வைத்து தகர்த்தனர். பின், அதிலிருந்த ௧௧ லட்சம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.முன்னதாக, கொள்ளையர்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க, ஏ.டி.எம்., மையத்திலுள்ள கண்காணிப்பு கேமரா மீது, கறுப்பு பெயின்டை ‘ஸ்பிரே’ செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.