"முன் மாதிரியா இருக்கணும்!"- 2வது மகளையும் நன்கொடையுடன் அரசுப் பள்ளியில் சேர்த்த ஆசிரியத் தம்பதி

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி, தேவாலா அட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு நிகரழி, மகிழினி என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நிகரழியை 4 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் வண்டிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். அந்தப் பள்ளிக்கு ரூ.15,000 மதிப்புள்ள கல்வி உபகரணங்களையும் வழங்கினர்.

இந்த நிலையில், தங்களது 2-வது மகள் மகிழினியையும் அதே பள்ளியில் அண்மையில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். ரூ.20,000 மதிப்புள்ள கல்வி உபகரணங்களை நன்கொடையாக அளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்தத் தம்பதியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அரசுப் பள்ளியில் சேர்த்த ஆசிரியத் தம்பதி

இது குறித்து பேசிய ஆசிரியத் தம்பதியினர், “நாங்கள் இருவரும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி விட்டு எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பது தவறான முன் உதாரணமாக இருப்பதாகத் தோன்றியது. இரண்டு மகள்களையும் அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறோம்.

தனியார் பள்ளியில் ஆகும் படிப்புக்கான தொகையை மகள்கள் படிக்கும் அரசுப் பள்ளிக்குப் பயன்படும் பொருள்களாக வழங்கி இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.