புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய கியூபா| Dinamalar

ஹவானா, புயல் தாக்கி சின்னாபின்னமாகியுள்ள கியூபா இருளில் சிக்கித் தவிக்கிறது.வட அமெரிக்காவில் கரீபியன் கடல் பகுதியில் இருக்கும் கியூபாவில், ‘இயன்’ புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. தீவு நாடான கியூபாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக, ஒரு கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக கன மழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மின் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்து கிடக்கின்றன. இதனால், நாடே வெள்ளத்தில் மட்டுமின்றி, இருளிலும் மூழ்கிக் கிடக்கிறது. பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நாட்டில் விளையும் சுருட்டுக்கான புகையிலை உலக அளவில் புகழ் பெற்றது. ஆனால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த புகையிலை தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.