வடகிழக்கு பருவமழை: அக்டோபரில் இயல்பைவிட அதிகமாக பெய்யும் – இந்திய வானிலை மையம்

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை 88 சதவீதம் – 112 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.
image
அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக 115 சதவீதத்திற்கு மேல் இருக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை கணக்கீடு முடிந்து அக்டோபர் 01 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கணக்கீடு தொடங்குகிறது.
தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பாக 33 செ.மீ பெய்யும். இந்தாண்டு 54 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.