கலிபோர்னியா, அமெரிக்காவில், 8 மாத பெண் குழந்தை உட்பட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங், 36. இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், 27, மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங், 39, ஆகியோருடன் வசித்து வருகிறார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் நால்வரும், நேற்று முன்தினம் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார்? எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால், கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல், போலீசாரை தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இதற்கு மேல் அதிக தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
கலிபோர்னியா, அமெரிக்காவில், 8 மாத பெண் குழந்தை உட்பட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்