ராஜஸ்தான்: ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக திட்டமிட்டு கணவனைக் கொன்ற மனைவி

ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்கு பேராசைப்பட்டு மனைவி ஒருவர் தனது கணவனை கொலைசெய்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்திலுள்ள குர்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் நேமாராம் மகத்(57). இவருடைய மனைவி சாரதா(47). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவனும் மனைவியும் எப்போது சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். குறிப்பாக தனது கணவன் பேரிலிருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தன்பேரில் மாற்றச்சொல்லி கணவனை சாரதா துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சண்டையில் ஒருமுறை தனது கணவன் காலையும் உடைத்திருக்கிறார் அவர். இதுகுறித்த வழக்கு மேர்தா காவல்நிலையத்தில் நடந்துவருகிறது. இது ஊரார் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு சாரதா தனது கணவன் பேரில் ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் செய்திருக்கிறார். அதே சமயத்தில் இவர்களுடைய மகனுக்காக ரூ.20 லட்சத்திற்கு டிராக்டர் வாங்கியுள்ளனர். அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடியும் உள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன்பு, நேமாராம் பெயரிலிருந்த 15 bighas (1/3 – 1 ஏக்கர்) நிலத்தை தன் பெயருக்கு மாற்றியுள்ளார் சாரதா. அது முதற்கொண்டு தனது கணவனை கொல்ல சதித்திட்டமும் தீட்டி வந்துள்ளார். அதனால் இருவருக்குமிடையே சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.
image
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த நேமாராமுக்கும் சாரதாவிற்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதில், நேமாராம் சாரதாவை அடித்து தாக்கியுள்ளார். அப்போது சுயநினைவை இழந்து கீழே விழுந்திருக்கிறார். அடி வாங்கியது மற்றும் ஏற்கெனவே இருந்த ஆத்திரம் சாரதாவின் தலைக்கேறவே தனது நீண்டநாள் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிவிட்டார். மயங்கி விழுந்த கணவனை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டார். இன்சூரன்ஸ் பணத்திற்காகவே இந்த கொல்லையை அவர் செய்திருப்பதாக நேமாராம் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில் தனது கொலை குற்றத்தை ஒத்துக்கொண்டார் சாரதா. அதன்பேரில் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்துள்ளனர். 28 வருட திருமண வாழ்க்கையில், மூன்று மாதங்களுக்கு முன்பு டிராக்டர் வாங்கி சந்தோஷ படுத்திய மனைவி அதைவிட பெரிய திட்டம் போட்டு தன்னை கொலைசெய்வார் என பாவம் நேமாராம் அப்போது யூகிக்கவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.