ஓபிஎஸ் வியூகம்… தேவர் ஜெயந்தியில் இப்படியொரு கிளைமாக்ஸ்- டஃப் கொடுக்கும் எடப்பாடி!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இதன் பின்னணியில் வாக்கு வங்கி அரசியலும் இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து மரியாதை செலுத்துவர். இதில் ஹைலைட்டான விஷயம் அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்கக்கவசம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த நிகழ்வை அக்கட்சியினர் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

நடப்பாண்டு

,

தலைமையில் இரு அணிகளாக பிளவுபட்டு கிடப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தேவர் ஜெயந்தியை ஒட்டி அதிமுக பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் தான், மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருக்கும் தங்கக் கவசத்தை பெற்று சென்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்குவார்.

அதன்பின்னர் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் தங்கக் கவசம் வங்கியில் வைக்கப்படும். இந்த சூழலில் திண்டுக்கல் சீனிவாசனை அதிமுகவின் பொருளாளர் என்று எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். ஆனால் பொருளாளர் பதவி தன்னிடமே இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

இதுதொடர்பாக இருவருமே மதுரையில் உள்ள வங்கிக்கு கடிதம் அளித்துள்ளனர். இதனால் எந்த பொருளாளருக்கு தங்கக் கவசம் பெறும் உரிமை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வங்கி என்ன முடிவு செய்யப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. இந்த சூழலில் தங்களது செல்வாக்கை தேவர் ஜெயந்தியில் காட்டியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருதரப்பினரும் இறங்கியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி நேரில் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் வடக்கு, மேற்கில் மட்டும் தான் எடப்பாடிக்கு செல்வாக்கு என்ற பிம்பத்தை உடைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தென் தமிழகத்தை சேர்ந்த அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மூலம் ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாஜிக்களை கொண்டு ஒரு டீமையே எடப்பாடி களமிறக்கி விட்டிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு சமூக அமைப்பினரை சந்தித்து ஆதரவு திரட்ட ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ”அதிமுக” என்ற பெயரில் தேவர் பூஜைக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்குமாறு மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் அறங்காவலர் காந்தி மீனாள் ஒப்புதலை பெற கடிதம் கொடுத்துள்ளது எடப்பாடி தரப்பு.

இதற்காக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகள் பசும்பொன் புறப்பட்டுச் சென்றுள்ளனர். எனவே எடப்பாடி தரப்பு அவ்வளவு எளிதில் இந்த விஷயத்தை விட்டுக் கொடுக்காது. முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு முதல் ஆட்சியரிடம் அனுமதி பெறுவது வரை இருதரப்பும் பலமான போட்டிக்கு தயாராகிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.