‛‛ மக்களிடையே சண்டையை உருவாக்கும் காங்., : அமித்ஷா தாக்கு| Dinamalar

சிம்லா: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிர்மார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

latest tamil news

அப்போது அவர் பேசியதாவது: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்.

latest tamil news

காங்., கட்சியானது, ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளது. ஆனால், அவர்களால் நம்முடைய பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க முடியவில்லை.

latest tamil news

பழங்குடியின அந்தஸ்து கோரி, 55ஆண்டுகளாக ஹாதி சமூகத்தினரின் நடத்திய போராட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முடித்து வைத்தார். அவர் அவர்களின் வலியைப் புரிந்துகொள்கிறார், மேலும் மாநில மக்கள் மீது அவருக்கு ஒரு பற்றுதல் இருப்பதால், ஹிமாச்சல் என்னுடையது என்று பெருமையுடன் கூறுகிறார்.

latest tamil news

ஹிமாச்சல் பிரதேசத்தில் 3-ல் இரு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். அரசியலில் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு முடிவு கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.