இன்னும் 2 மாசம் தான்… எடப்பாடிக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்- மாஃபா சொன்ன சீக்ரெட்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவின் பொன்விழா மற்றும் 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக பார்க்கக் கூடிய கட்சி அதிமுக மட்டுமே. திமுக அவ்வாறு இல்லை. தற்போதைய திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதனால் தான் மின்வெட்டும், திமுகவும் ஒட்டிப் பிறந்தது என விமர்சனம் செய்கின்றனர்.

திமுக பொதுக் குழுவில் நடந்ததை பார்த்திருப்பீர்கள். அமைச்சர்களின் செயல்களை பார்த்து என் உடம்பு ஒரு மாதிரி ஆகிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக மக்களை இழிவுபடுத்தி திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர். நான் கேட்கிறேன். மானம், ரோஷம் இருந்தால் ஒரு அமைச்சரை தூக்கி வெளியே அனுப்ப முடியுமா? என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசுகையில், அதிமுகவில் கடைக்கோடி தொண்டன் கூட பெரிய பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவில் ஸ்டாலின் ஒரு பக்கம். உதயநிதி, கனிமொழி ஆகியோர் மறுபக்கம். இவர்களின் சொந்தகாரர் ராஜா மற்றொரு பக்கம். இவ்வாறு குடும்ப அரசியல் தான் கட்சியில் நடைபெற்று வருகிறது. திமுகவை பொறுத்தவரை கமிஷன், கலெக்சன், கரப்ஷன்.

அவர்கள் கட்சியிலேயே பொறுப்பு வாங்கினாலும் இப்படித்தான் நடக்கும் என்றார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர்

இன்னும் இரண்டு மாதத்தில் நிரந்தர பொதுச் செயலாளர் ஆகிவிடுவார். திமுகவின் 16 மாத கால ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தான் ”கண்டா வரச் சொல்லுங்க… எடப்பாடி பழனிசாமியை கண்டா வரச்சொலுங்க…” என பாடும் அளவிற்கு திமுக ஆட்சி மாறியிருக்கிறது.

பார்த்துக் கொண்டே இருங்கள். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக நடைபெற வாய்ப்புள்ளது என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி,

என தனித்தனியே அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி கணக்கு போட்டார்.

அதற்குள் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஓபிஎஸ் அணியினர் தடை வாங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை திரும்பப் பெறுவதற்கு நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அப்படியிருக்கையில் இன்னும் இரண்டே மாதத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகிவிடுவார் என்று மாஃபா பாண்டியராஜன் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதையொட்டி சீக்ரெட்டாக காய்களை நகர்த்தி வருகிறார்களா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.