மீனவர்கள் மீதான தாக்குதல்-மனிதாபிமானத்துடன் நடந்து கொள்க.. இலங்கையிடம் இந்திய கடற்படை வலியுறுத்தல்..!

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுமாறு இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடற்படை வலியுறுத்தியுள்ளது.

இந்திய கடற்படையின் தமிழக மற்றும் புதுச்சேரி பொறுப்பு அதிகாரியான வெங்கட்ராமன்  மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி தென்னகன் ஆகியோர் இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகளை இலங்கையின் சாயுரா கப்பலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தமிழக மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களில் இலங்கைக் கடற்படை ஈடுபடுவது தொடர்பான பிரச்சினையை எழுப்பிய இந்திய அதிகாரிகள் மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.