நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… ஆனா இந்த ஏரியாவில் மட்டும்தான்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளது. குறிபபாக டெல்டா மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் ஆக்கூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை பெரும்பாலான நாட்கள் மாவட்டத்திவ் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் (நவம்பர் 17) நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அதன் எதிரொலியாக நவம்பர் 14 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.