கர்நாடகா || திருமண நிகழ்ச்சியில் திடீரென மயங்கிய இளம்பெண் உயிரிழப்பு.!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே என்ற பகுதியில் ஜோஸ்னா லூயிஸ் என்ற 23 வயதுடைய இளம்பெண் தனது உறவினர் வீட்டின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க சென்றுள்ளார். 

அப்போது, அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு சென்ற அவர், திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்த இறப்பிற்கான காரணம் என்னவென்று பார்க்கும் போது மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற மாரடைப்பு சம்பவங்கள் வளர்ந்து வரும் இளம் தலைமுறைகளுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.