அரசு ஊழியர்கள் மூவரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஆட்சியர்!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்தல், புகைப்படம் மாற்றி அமைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.

வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது பணியில் இல்லாத 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் சத்துணவு அமைப்பாளர், கிராம உதவி உதவியாளர், சத்துணவு பணியாளர் உட்பட 7 பேரை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆரோக்கிய தாஸ், சேவியர் புஷ்பராஜ் ஆகிய இரண்டு சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் தீபா ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இத்தகைய சிறப்பு முகாமில் பணியில் இல்லாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.