
திமுகவை சேர்ந்தவர்கள் குறிப்பாக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநகராட்சி வளர்ச்சி பணிக்காக வரவேண்டிய 32,000 கோடி ரூபாயை மாநில அரசு தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டினார்.
மேலும், எங்கு பார்த்தாலும் குப்பை கிடங்காக உள்ள டெல்லியை சுத்தம் செய்து அப்புறப்படுத்த முயற்சிகளை எடுத்த டெல்லி மாநகராட்சிக்கு மாநில அரசு எந்த ஒத்துழைப்பை தரவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரசாரத்தில் காட்டும் ஆர்வத்தை டெல்லி வளர்ச்சி பணிகளில் கெஜ்ரிவால் காட்டவில்லை என்றும், மகளிருக்கான சிறப்பு மருத்துவமனைக்கு செய்த செலவை விட கெஜ்ரிவால் சொந்த கட்சிக்காக விளம்பரம் செய்த செலவு அதிகம் என்றும் அண்ணாமலை கூறினார்.
திமுக குறித்து பேசிய அவர், அக்கட்சியை சேர்ந்தவர்கள், குறிப்பாக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது என்று கூறினார்.
பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள் பாதுகாப்பு பொறுப்பு மட்டுமே எஸ்பிஜி பிரிவின் கையில் உள்ளது. வெளிப்புறத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பும் மாநில அரசின் கையில் தான் உள்ளது. இது குறித்து தமிழக ஆளுநரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையின் பொழுது பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து திருப்பதி இல்லை என மாநில அரசே அவர்களின் எஸ்பி-யிடம் கூறியுள்ளனர். தமிழக அரசு தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது என்று கூறினார்.
newstm.in