பண கஷ்டத்தால் கடன் வாங்க சென்ற தையல்காரர்! அடுத்த சில நிமிடங்களில் லொட்டரியில் கிடைத்த கோடி பணம்


கேரளாவில் பண பற்றாக்குறையால் வங்கியில் கடன் வாங்க சென்ற தையல்காரருக்கு லொட்டரியில் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

தையல்கடை

கேரளாவின் மூர்கட்டுபாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் கனில் குமார்.
இவர் சிறிய தையல்கடை நடத்தி வந்தார், கனில் மனைவி பிரசன்னாவும் அந்த கடையில் வேலை செய்து வந்தார்.

கிழிந்த துணிகளை தைக்கும் தங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் வராதா என தம்பதி ஏங்கி வந்தனர்.
இந்த சூழலில் தான் காருண்யா ப்ள்ஸ் லொட்டரி சீட்டை கனில் வாங்கினார்.

பண கஷ்டத்தால் கடன் வாங்க சென்ற தையல்காரர்! அடுத்த சில நிமிடங்களில் லொட்டரியில் கிடைத்த கோடி பணம் | Lottery Tailer Won Huge Prize

manoramaonline

லொட்டரியில் பரிசு

அதற்கான முடிவுகள் வந்த போது தனக்கு பரிசு விழவில்லை என அவராகவே நினைத்து கொண்டார்.
பின்னர் தொழிலை பெரிதாக்க வங்கியில் கடன் வாங்குவது தொடர்பாக பேச கனில் சென்றார்.

அந்த சமயத்தில் கனில் வாங்கிய லொட்டரிக்கு முதல் பரிசாக ரூ 80 லட்சம் (இலங்கை மதிப்பில் ரூ. 3,60,53,266.27) விழுந்ததை அவர் நண்பர் பார்த்து இது குறித்து கனிலிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மகிழ்ச்சியில் துள்ளினார் கனில். சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்த கனில் தனது வாழ்வில் வெளிச்சம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.