சமந்தாவைப் போல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை! இரண்டு ஆண்டுகளாக போராட்டம்


நடிகை பூனம் கவுர் அரிய வகை நோயுடன் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பூனம் கவுர்

பிரபல தமிழ் நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனுடன் போராடி வருவதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்ளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில் சமந்தாவைப் போல் மற்றொரு நடிகையும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் கவுர் (36).

தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் பூனம் நடித்துள்ளார்.

பூனம் கவுர்/Poonam Kaur

அரியவகை நோய்

கடந்த சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பூனம் கவுர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோய் பாதித்தால் எலும்பின் ஜாயின் பகுதியில் வலி ஏற்படும். மூளை, முதுகு தண்டு பகுதியில் அதிக வலி இருக்கும் என்று கூறப்படுகிறது.

பூனம் கவுர் இந்த நோயுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக கூறப்படுகிறது.

பூனம் கவுர்/Poonam Kaur

இந்த நிலையில் அவர் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பூனம் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும், ஆனால் அது வலியை ஏற்படுத்தாமல் இருக்க மட்டும் தான் உதவும் என்றும் கூறப்படுகிறது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.