ஆசை ஆசையாய் திருமணம் செய்த மணமகனுக்கு காத்திருத பேரதிர்ச்சி..!! மணமேடையிலேயே நிகழ்ந்த துயரம்.. !!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ அருகே உள்ள பத்வானா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்பால் சர்மா. இவரின் மகள் ஷிவாங்கி ஷர்மா (21). இவருக்கும் அங்குள்ள புத்தேஸ்வர் மொஹலா பகுதியை சேர்ந்தவர் விவேக் என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது, ஷிவாங்கி ஷர்மா திடீரென தன்னிலை மறந்து இருக்கையில் அமர்ந்தவாறு மயங்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இருதரப்பு குடும்பத்தினரும், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

அங்கு ஷிவாங்கியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்துள்ளனர். இதனையறிந்த குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஷிவாங்கி ஷர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. ஷிவாங்கி சர்மா மயங்குவதற்கு முன்பு திருமண மண்டபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.