இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 டிசம்பர்07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 டிசம்பர்07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது
தென்கிழக்கு வங்காள விரிகுடாகடற்பரப்புகளில்(திருகோணமலைக்கு வடகிழக்காக 570 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 07ஆம் திகதி மாலையளவில் ஒருசூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இத் தொகுதியானது டிசம்பர் 08ஆம் திகதியளவில் வடதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப்பிரதேசங்களை அடையக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழைபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமானஓரளவு பலத்தமழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.