வலுவிழந்து கரையை நோக்கி நகர்கிறது மண்டோஸ் புயல்!


வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மண்டோஸ் வலுவிழந்து புயலாக மாறி
கரையை நோக்கி நகர்ந்து வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மண்டோஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட
காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம்
அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மண்டோஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத்
துவங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று

மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த
காற்று வீசி வருகிறது.

வலுவிழந்து கரையை நோக்கி நகர்கிறது மண்டோஸ் புயல்! | India Braces Cyclone Mandous Advances Sri Lanka

தற்போது மண்டோஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், சென்னை
அருகே 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, காட்டுபாக்கம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காற்று 60
கி.மீட்டர் வேகத்தில் வீசி வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.