விலையில்லா சானிடரி நாப்கின் திட்டம் தொடக்கம்!!

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதன்படி நகர்ப்புற பள்ளிகளில் பயிலும் 14.91 கோடி மாணவிகளுக்கு வருடத்திற்கு 18 நாப்கின் பைகள் வழங்கப்படும். அதற்காக மட்டும் 34.74 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதே போல தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க 9 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இதில் பயனடைவர். இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.4.6 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.