காவி உடை சாமியார்கள் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள் – பதான் விஷயத்தில் பிரகாஷ் ராஜ் காட்டம்

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் முதல் பாடல் ‘பேஷ்ரம் ரங்’ சமீபத்தில் வெளியானது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

பேஷ்ரம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் தோன்றியிருந்தார். இதற்கு சிலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா, ‘பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவி உடை அணிந்தவர்கள் கற்பழிப்பவர்கள்..புரோக்கர் எம்.எல்.ஏ.க்கள், காவி உடை அணிந்த சுவாமிகள் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும்போது பரவாயில்லை, ஆனால் ஒரு படத்தில் காவி உடை அணியக்கூடாது இல்லையா? இந்தூரில் ஷாருக்கானின் உருவ பொம்மைகளை எதிர்ப்பாளர்கள் எரித்தனர். அவர்களின் கோரிக்கை ‘பத்தானை’ தடை செய்ய வேண்டும் என்பது” என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.